உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கல்லாறில் வாகன தணிக்கை தீவிரம்

கல்லாறில் வாகன தணிக்கை தீவிரம்

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் கல்லாறு பகுதியில், போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மேட்டுப்பாளையம் வழியாக தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சுற்றுலா தலமான நீலகிரிக்கு செல்கின்றன. போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்டவைகளை கண்காணிக்க கல்லாறு பகுதியில் நீலகிரி போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். இதுகுறித்து நீலகிரி போலீசார் கூறுகையில்,நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகள் மற்றும் மக்களின் பாதுகாப்பு கருதி பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன் ஒருபகுதியாக நீலகிரி மாவட்டத்திற்குள் சமூக விரோதிகள் சென்றுவிடக்கூடாது, போதை பொருட்களை கடத்தக்கூடாது என்ற நோக்கத்துடன் கல்லாறு இ-பாஸ் சோதனைச்சாவடியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறோம், என்றனர்.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை