உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பரவலாக பெய்த மழையால் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

பரவலாக பெய்த மழையால் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

வால்பாறை : வால்பாறையில், கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை துவங்கியது. தொடர் மழையின் காரணமாக, ஜூலை 19ம் தேதி, 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை நிரம்பியது. இதனை தொடர்ந்து சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.தொடர்ந்து கனமழையால், ஆழியாறு, பரம்பிக்குளம் உள்ளிட்ட பி.ஏ.பி., அணைகள் அனைத்தும் நிரம்பின. இதனால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.இந்நிலையில், கடந்த, 15 நாட்களுக்கு மேலாக வால்பாறையில் மழைப்பொழிவு இன்றி, வெயில் நிலவியது. நேற்று முன்தினம் பரவலாக கனமழை பெய்தது. இதனால் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்தும் அதிகரித்தது.சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 159.25 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 639 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 420 கனஅடி தண்ணீர் வீதம் பரம்பிக்குளம் அணைக்கு திறந்துவிடப்படுகிறது.நேற்று காலை, 8:00 மணி வரை, வால்பாறையில் - 34, சோலையாறு - 28, மேல்நீராறு - 33, கீழ்நிராறு - 15 மி.மீ., என்ற அளவில் மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ