உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாழையை ருசித்த ஒற்றை யானை விரட்ட முடியாமல் தொழிலாளர்கள் தவிப்பு

வாழையை ருசித்த ஒற்றை யானை விரட்ட முடியாமல் தொழிலாளர்கள் தவிப்பு

வால்பாறை : வாழையை ருசிக்க வந்த ஒற்றை யானையை விரட்ட முடியாமல் தொழிலாளர்கள் தவித்தனர்.வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில், யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. இந்நிலையில், அக்காமலை எஸ்டேட் இரண்டாவது டிவிஷனில் நேற்று முன் தினம் இரவு தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ஒற்றை யானை, இரண்டு வீடுகளின் முன் பயிரிடப்பட்ட வாழைகளை ருசித்து உட்கொண்டது.இரவு நேரம் என்பதாலும், பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டதாலும், தொழிலாளர்கள் யானையை விரட்ட முடியாமல் பரிதவித்தனர்.தொழிலாளர்கள் கூறுகையில், 'அக்காமலை எஸ்டேட் பகுதியில், யானை வரும் முன் ஓலி எழுப்பும் கருவி பழுதாகி பல மாதங்களாகிறது. இதனால் யானை இரவில் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் தெரியவில்லை. பழுதடைந்த நிலையில் உள்ள ஒலி எழுப்பும் கருவியை உடனடியாக சரி செய்து, தொழிலாளர்களுக்கு வனத்துறை சார்பில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்' என்றனர்.

வாழை தண்டு எனக்கு; தார் உங்களுக்கு

அக்காமலை எஸ்டேட் பகுதியில் இரண்டு தொழிலாளர்களின் வீடுகளின் பின் புறம் பயிரிடப்பட்ட வாழைகளை ஒற்றை யானை ருசித்து உட்கொண்டது. அதன் பின்னர், வாழைகளின் தண்டை மட்டும் சாப்பிட்டுவிட்டு, வாழைத்தாரை பத்திரமாக மூடி வைத்தது. ஒற்றை யானையின் இந்த செயலை தொழிலாளர்கள் கண்டு வியந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ