எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
கோவை; ஊரக வளர்ச்சித்துறையில் பதிவறை எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். கலெக்டர் அறிக்கை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில், டிரைவர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இனசுழற்சி மூலம் பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பான விவரங்கள், www.tnrd.tn.gov.inஎன்ற இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன. விண்ணப்பிக்க, வரும் 30 கடைசி தேதி.