உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கொளஞ்சியப்பர் கல்லுாரியில் மூன்றாம் கட்ட கலந்தாய்வு

கொளஞ்சியப்பர் கல்லுாரியில் மூன்றாம் கட்ட கலந்தாய்வு

விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில், வரும் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடக்கும், இளங்கலை பாடபிரிவுகளுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வில் மாணவர்கள் கலந்து கொள்ள முதல்வர் சுரேஷ்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு;விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில் 2024 - 25ம் கல்வி ஆண்டிற்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு கூட்டம் வரும் 9, 10 மற்றும் 11ம் தேதி வரை நடக்கிறது.இதில் 9ம் தேதி பி.எஸ்.சி., கணிதம், இயற்பியல், வேதியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் கணினி அறிவியல் பாடங்களுக்கும், 10ம் தேதி பி.காம்., ; பி.பி.ஏ.,; பி.ஏ., வரலாறு, பொருளாதாரம், 11ம் தேதி பி.ஏ., தமிழ், ஆங்கிலம் ஆகிய பாட பிரிவுகளுக்கு கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது.இந்த பொது கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள் காலை 9:30 மணிக்கு வர வேண்டும். மேலும், கல்வி சான்றிதழ், சாதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் போட்டோ, ஆதார் அட்டை மற்றும் பேங்க் புக் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ