உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எ.வடக்குப்பம் சாலை பஞ்சர்

எ.வடக்குப்பம் சாலை பஞ்சர்

விருத்தாசலம் : எ.வடக்குப்பம் - எருமனுார் கிராம இணைப்பு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விருத்தாசலம் அடுத்த எ.வடக்குப்பம் - எருமனுார் கிராம இணைப்பு சாலையில் தனியார் பஸ், லாரி, வேன், டெம்போ உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன.இந்த சாலை போடப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், தற்போது ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர். எனவே, கிராம மக்கள் நலன் கருதி, குண்டும், குழியுமாக உள்ள எ.வடக்குப்பம் - எருமனுார் கிராம இணைப்பு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை