உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில் மழலையர் பிரிவு துவக்கம்

அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில் மழலையர் பிரிவு துவக்கம்

கடலுார்: கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில், 2024-25ம் ஆண்டிற்கான மழலையர் பிரிவு துவக்க விழா மற்றும் கிட்ஸ் மைண்ட் வார்மிங் தினம் நடந்தது.பள்ளி தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கி, மழலையர்களுக்கு பூங்கொத்து கொடுத்து மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்றார். பள்ளி தலைமை நிர்வாக அதிகாரி லட்சுமி சிவக்குமார் முன்னிலை வகித்தார். இதில், பள்ளியில் நடைபெறவுள்ள கற்றல் கற்பித்தலின் சாராம்சங்களை மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள் மூலம் வெளிப்படுத்தினர்.அப்போது, பள்ளி முதல்வர் மதுர பிரசாத் பாண்ட மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி