உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு

கிள்ளை : வார விடுமுறை நாள் என்பதால் நேற்று பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் வன சுற்றுலா மையத்தில் இயற்கை சூழலுடன், மாங்குரோவ்ஸ் தாவரங்கள் நிறைந்திருப்பதால், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து படகு சவாரி செல்கின்றனர். பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் வழக்கத்தைவிட ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் வந்து படகு சவாரி சென்று செல்வார்கள். இந்நிலையில் நேற்று வார விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சுரைபுண்ணை காடுகளை சுற்றிபார்க்க ஒரே நேரத்தில் அனைவரும் செல்ல முடியாததால், பலர் சுற்றுலா மையத்தில் பல மணி நேரம் காத்திருந்து, படகில் சென்று இயற்கை அழகை கண்டு ரசித்து சென்றனர். படகில் செல்ல முடியாதவர்கள், பார்வை கோபுரத்திற்கு சென்று இங்குயிருந்தப்படியே இயற்கை அழகை ரசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்