உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பகலிலும் எரியும் விளக்குகள் புவனகிரியில் அவலம்

பகலிலும் எரியும் விளக்குகள் புவனகிரியில் அவலம்

புவனகிரி : புவனகிரி, கீரப்பாளையம் ஒன்றியங்களில் இரவு, பகலாக தெரு விளக்குகள் எரிவதால், மின்சாரம் விரயம் ஏற்படுகிறது.புவனகிரி மற்றும் கீரப்பாளையம் ஒன்றிய பகுதி கிராமங்கள் மற்றும் புவனகிரி பேரூராட்சி வார்டு பகுதிகளில், தெரு விளக்குகள் இரவு பகலாக தொடர்ந்து எரிந்து வருகிறது. இதனால் மக்கள் வரி பணம் மின் கட்டணம் என்ற பெயரில் அதிக அளவில் விரயமாகிறது. தினசரி இந்த சாலை வழியாக அரசு வாகனங்களில் பயணிக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கண்டும் காணாமல் செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் தீவிர கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி