உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை

சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை

பெண்ணாடம்: பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர், இறையூர் தாகம் தீர்த்தபுரீஸ்வரர் கோவில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது.இதையொட்டி, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில் நேற்று காலை மூலவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மாலை 4:45 மணியளவில், முன் மண்டபத்தில் உள்ள நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், பன்னீர், திரவிய பொடி ஆகியவைகளால் அபிஷேகம், 5:30 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது.இதேபோன்று, இறையூர் தாகம் தீர்த்தபுரீஸ்வரர் கோவில் நந்தி பகவானுக்கு பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை