உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மனை பட்டா வழங்க கோரி பொதுமக்கள் போராட்டம்

மனை பட்டா வழங்க கோரி பொதுமக்கள் போராட்டம்

விருத்தாசலம் : வீட்டுமனை பட்டா வழங்க கோரி, விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் எருமனுார் பகுதியில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.அப்போது பயனாளிகள் அனைவருக்கும், ஒப்படை மனு வழங்கப்பட்டு, பின்பு பட்டா வழங்கப்படும் என, வருவாய் துறையினர் கூறினர். இதுவரை பட்டா வழங்கப்படவில்லை.இதையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள், வீட்டு மனைபட்டா வழங்க கோரி, விருத்தாசலம் தாலுகா அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய தாசில்தார் உதயகுமார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பின், தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில், பொதுமக்கள் அனைவரும் தங்களின் கோரிக்கையை மனுவாக அளித்து சென்றனர்.இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ