உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோவில்களில் சஷ்டி வழிபாடு

கோவில்களில் சஷ்டி வழிபாடு

விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் முருகர் சாமிக்கு சஷ்டி சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் சாமி, 28 ஆகம சன்னதியில் உள்ள குமரேஸ்வரர் சாமிகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. மாலை 4:00 மணிக்கு மேல், சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர்.மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. சுவாமிகள் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.இதேபோல், எருமனுார் சாலையில் உள்ள ஆதி கொளஞ்சியப்பர் கோவிலில் சாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள வேடப்பர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி