உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஸ்பீக் ஈஸி இங்கிலீஷ் இன்ஸ்டிட்யூட்டில் கோடைகால பயிற்சி 1ம் தேதி துவக்கம்

ஸ்பீக் ஈஸி இங்கிலீஷ் இன்ஸ்டிட்யூட்டில் கோடைகால பயிற்சி 1ம் தேதி துவக்கம்

கடலுார் : கடலுார் ஸ்பீக் ஈஸி ஸ்போக்கன் இங்கிலீஷ் இன்ஸ்டிட்யூட்டில் கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்பு 1ம் தேதி துவங்குகிறது.இதுகுறித்து ஸ்பீக் ஈஸி ஸ்போக்கன் இங்கிலீஷ் இன்ஸ்டிட்யூட் நிர்வாகி கூறியதாவது: ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் விரும்புபவர்களுக்கு ஸ்பீக் ஈசி முறையான வெற்றிப் பாதையைக் காட்டுகிறது. ஆங்கிலம் கற்றுக் கொள்ள விரும்புவோர் ஸ்பீக் ஈசி பயிற்சி மையத்தை அணுகலாம். ஆங்கிலம் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய காலகட்டம் இது. ஏனெனில் அனைத்து இடங்களிலும் எழுதவோ, பேசவோ ஆங்கிலம் தேவைப்படுகிறது. 15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கும் இம்மையத்தின் மூலமாக ஏராளமானோர் பயன்பெற்றனர்.சர்வதேச தரத்தில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. பள்ளி, கல்லுாரிகளில் கற்றுத் தரப்படும் ஆங்கிலம் பேசுவதற்கான நுணுக்கங்களை கற்றுத் தருகிறோம். ஆங்கிலத்தை செயல்முறையிலும் கற்றுத் தருகிறோம். தொடர் பயிற்சி மூலம் சரளமாக, எழுத, பேச கற்றுத் தரப்படுகிறது. கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்பு வரும் 1ம் தேதி துவங்குகிறது. பயிற்சியில் சேர விரும்புவோர் நேதாஜி ரோடு, பாரத ஸ்டேட் வங்கி எதிரில், (கார்த்திகேயன் தோல் மருத்துவர் அருகில்) மஞ்சக்குப்பம், கடலுார் என்ற முகவரி அல்லது 7708133111 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்