உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் செல்லும் அவலம்

சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் செல்லும் அவலம்

கடலுார்,- கடலுாரில் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச்செல்வதால் உயிரிழப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் மினி சரக்கு வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச்செல்லவே கூடாது. ஆனால், இந்த வாகனங்களில் தற்போது அதிகளவில் ஆட்களை மட்டுமே ஏற்றிச் செல்கின்றனர்.இதனால், விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடலுார் மாவட்டத்திலும் விதிமுறை மீறி சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச்செல்லும் நிலை நீடித்து வருகின்றது. இதை போக்குவரத்து போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கண்டுகொள்வதில்லை.எனவே, விதிமுறை மீறி ஆட்களை ஏற்றிச்செல்லும் மினி சரக்கு வாகனங்களின் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி