உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குட்டியாண்டவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

குட்டியாண்டவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

கடலுார் : கடலுார் செல்லங்குப்பத்தில் அமைந்துள்ள பூரணி புஷ்கலா சமேத குட்டியாண்டவர்கோவில் கும்பாபிஷேக 21ம் ஆண்டு பூர்த்தி நடந்தது. இதை முன்னிட்டு நேற்று 20ம்தேதி 108 சங்காபிஷேகம் மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.விழாவையொட்டி, நேற்று காலை 7:00 மணிக்கு அனுக்ஞை, கணபதி பூஜை, 108 சங்கு பூஜை, பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு 108 சங்காபிேஷகம், 11:00 மணிக்கு மகா தீபாராதனை, பகல் 12:00 மணிக்கு பூரணி புஷ்கலா சமேத குட்டியாண்டவர் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 4:30 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ