உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தவறி விழுந்த போக்குவரத்து ஊழியர் சாவு

தவறி விழுந்த போக்குவரத்து ஊழியர் சாவு

பண்ருட்டி: பண்ருட்டி அருகே நாற்காலியில் இருந்து தவறி விழுந்த, அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் உயிரிழந்தார்.பண்ருட்டி அடுத்த இலுப்பைதோப்பு ராகவேந்திரா நகரை சேர்ந்தவர் ஜான்சாட்தீபன், 56; புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 18ம் தேதி வீட்டில் நாற்காலியில் இருந்து எழுந்த போது தவறி விழுந்ததில் தலை பகுதியில் அடிபட்டு, கோமா நிலைக்கு சென்றார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் இறந்தார்.பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ