உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வடலுார் அரிமா சங்கம் விருது வழங்கல் 

வடலுார் அரிமா சங்கம் விருது வழங்கல் 

மந்தாரக்குப்பம் : வடலுார் டெம்பிள் சிட்டி அரிமா சங்கம் சார்பில் டி.ஆர்.எம்., சாந்தி கல்வி அறக்கட்டளை நிறுவனர் ராஜமாரியப்பனின் கல்வி சேவையை பாராட்டி விருதுகள் வழங்கினர்.வடலுார் டெம்பிள் சிட்டி அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவிற்கு சாசன தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். சாசன செயலாளர் பழனிவேல் முன்னிலை வகித்தனர். விழாவில் கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சியின் முக்கிய பங்கு வகிக்கும் டி.ஆர்.எம்., சாந்தி கல்வி அறக்கட்டளை நிறுவனர் ராஜமாரியப்பனின் கல்விச் சேவையை பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் விருதினை ஜெயின் ஜூவல்லரி அகர்சந்த் வழங்கி பேசினார். அரிமா ஆளுநர்கள் தணிகாசலம், சுரேஷ்நீலகண்டன், ரத்தினசபாபதி, முதல் நிலை துணை ஆளுநர் ராஜாசுப்பிரமணியன், மாவட்ட தலைவர் ராமவாசுதேவன், வடலுார் டெம்பிள் சிட்டி அரிமா சங்க நிர்வாகிகள் பிரபாகரன், செந்தில்குமார், குலசேகரபாண்டியன், உட்பட பலர் பங்கேற்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ