உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  விருதைக்கு ரயில் மூலம் 1,462 டன் உரம் வருகை

 விருதைக்கு ரயில் மூலம் 1,462 டன் உரம் வருகை

விருத்தாசலம்: விருத்தாசலம் ரயில் நிலையத்துக்கு 1,462 டன் உர மூட்டைகள் சரக்கு ரயிலில் வந்திறங்கின. சென்னை மணலில் உள்ள மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் என்ற மத்திய அரசின் உர நிறுவனத்தில் இருந்து 21 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயிலில், விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு 1,462 டன் உர மூட்டைகள் நேற்று காலை வந்தன. அவற்றை, கடலுார் மாவட்டத்தில் உள்ள தனியார் உர கடைகளுக்கு பிரித்து, லாரிகளில் ஏற்றி அனுப்பி வைக்கும் பணி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ