உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குட்கா விற்ற 3 பேர் கைது

குட்கா விற்ற 3 பேர் கைது

விருத்தாசலம்: விருத்தாசலம் பகுதியில் குட்கா விற்ற பெட்டிக்கடை உரிமையாளர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று விருத்தாசலம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, தெற்கு பெரியார் நகர், கண்ணதாசன் தெருவைச் சேர்ந்த சந்திரபாபு, 53; ஜெயில் தெருவைச் சேர்ந்த வீரராகவன், 50; பழமலைநாதர் நகர், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ரபீயா பீவி, 56, ஆகியோர் தங்களது பெட்டிக் கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, குட்கா பாக்கெட்டுகள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, 3 பேரையும் கைது செய்து குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ