உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் உழவர் சந்தையில் வாழைத்தார்கள் குவிந்தது

கடலுார் உழவர் சந்தையில் வாழைத்தார்கள் குவிந்தது

கடலுார் : பொங்கல் பண்டிகைக்கு பொருட்கள் வாங்குவதற்கு கடலுார் மார்க்கெட் மற்றும் உழவர் சந்தையில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.தமிழகத்தில் இன்று தை பொங்கல், நாளை மாட்டுப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இதையொட்டி, பொங்கல் பண்டிகை பொருட்கள் மற்றும் பூஜை பொருட்கள் வாங்குவதற்கு கடலுார் மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.மேலும், கடலுார் உழவர் சந்தைக்கு நேற்று டன் கணக்கில் வாழைத்தார்கள் குவிந்தது. வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான வாழைத்தார்களை வாங்கிச்சென்றனர்.இதில் 200 முதல் 400 ரூபாய்க்கு வாழைத்தார்கள் விற்பனை செய்யப்பட்டது. மஞ்சள் கொத்து 20 ரூபாய்க்கும், பன்னீர் கரும்பு ஜோடி 80 முதல் 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ