உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பீர் பாட்டில் தாக்குதல்; 4 பேர் மீது வழக்குப் பதிவு

பீர் பாட்டில் தாக்குதல்; 4 பேர் மீது வழக்குப் பதிவு

வடலுார்; குடிபோதையில் பீர் பாட்டில் தாக்குதலில் ஈடுபட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். வடலுார் அடுத்த சேராக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி, 38; இவர், அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடந்த விழாவில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, சுவாமியை மறைப்பதாக கூறி அவரிடம் சிலர் தகராறில் ஈடுபட்டனர். இதனை தட்டிக்கேட்ட விஜயலட்சுமியின் கணவர் சக்திவேலை, 45; ஒரு கும்பல் பீர் பாட்டிலால் தாக்கியது. மேலும், விஜயலட்சுமியின் புடவையை இழுத்து மனபங்கப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், தாக்குதலில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த செல்லதுரை, சின்னதுரை, செல்வகுமார் தனுஷ் ஆகிய 4 பேர் மீதும் வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை