உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாட்டிலால் தாக்கியவர் கைது 

பாட்டிலால் தாக்கியவர் கைது 

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே வாய்தகராறில், முதியவரை பாட்டிலால் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை சவுன்டீஸ்வரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், 56; இவருக்கும் சந்தைபேட்டை தெருவைச் சேர்ந்த மணிகண்டன், 50, என்பருக்கும் இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த மணிகண்டன், ஜெயக்குமாரை பாட்டிலால் தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, மண்கண்டனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை