உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கல்லுாரி மாணவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

கல்லுாரி மாணவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

குறிஞ்சிப்பாடி; கல்லுாரி மாணவரை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். குறிஞ்சிப்பாடி, விழுப்பள்ளம் காலனியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு மகன் தமிழ்செல்வன், 20; கல்லுாரி மாணவர். இவர் நேற்று முன்தினம் குறிஞ்சிப்பாடியில் உள்ள டிபன் கடைக்கு சென்றார். அப்போது அங்கு, முன்விரோதம் காரணமாக அவரை ஒரு கும்பல் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து தமிழ்செல்வன் அளித்த புகாரின் பேரில், தாக்குதலில் ஈடுபட்ட கு.நெல்லிக்குப்பம் கோகுல், மீனாட்சிப்பேட்டை சந்துரு, ராஜவன்னியன் ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை