உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பட்ட பகலில் வட்டிக்கடையில் செயின் பறிப்பு : வாலிபர் கைது

பட்ட பகலில் வட்டிக்கடையில் செயின் பறிப்பு : வாலிபர் கைது

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பில் பட்ட பகலில் வட்டிக்கடையில் நகையை திருடிக்கொண்டு ஓடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.சேத்தியாத்தோப்பு தெற்கு சென்னிநத்தம் வள்ளலார் தெருவைச் சேர்ந்த பெரியசாமி மகன் முருகானந்தம்,45; சந்தைத்தோப்பு அருகே உள்ள லலித் பேங்கர்ஸ் வட்டிக்கடையில் எழுத்தர் வேலை செய்து வருகிறார்.நேற்று வழக்கம்போல முருகானந்தம் பணியில் இருந்தபோது பகல் 12.00 மணியளவில் அங்கு வந்த வாலிபர் ஒருவர் பழைய நகை 4 கிராமில் செயின் விலைக்கு கேட்டுள்ளார்.செயினை முருகானந்தம் காட்டியபோது திடிரென வாலிபர் செயினை பறித்துக்கொண்டு ஓடியவரை வாலிபரை பொதுமக்கள் உதவியுடன் துரத்தித்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் சிதம்பரம் அடுத்த கண்ணங்குடி தெற்கு தெருவைச் சேர்ந்த சங்கர் மகன் ஸ்ரீதர்,25; செயினை பறித்துச்சென்றது தெரியவந்தது.புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப் பதிந்து ஸ்ரீதரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை