உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் சிறையில் ரகளை: 3 கைதிகள் மீது வழக்கு பதிவு

கடலுார் சிறையில் ரகளை: 3 கைதிகள் மீது வழக்கு பதிவு

கடலுார்: கடலுார் மத்திய சிறையில் காவலர்களிடம் தகராறு செய்த மூன்று கைதிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடலுார் மத்திய சிறை காவலர்கள் வாசு, வாஞ்சிநாதன், மகேந்திரன் ஆகியோர் நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு இணைப்பு சிறை அறை எண் 3ல் கைதிகளை உட்கார வைத்து கணக்கு எடுத்தனர்.அப்போது சென்னையைச் சேர்ந்த கைதிகள் தோட்டா சேகர் மகன்கள் பாலாஜி,27; அழகுராஜா,25; வெங்கடேசவரலு மகன் விஷ்ணு, 23; ஆகியோர் உட்காராமல் நின்றனர். அவர்களை காவலர்கள் கீழே உட்கார கூறியதற்கு, மூவரும் உட்கார முடியாது எனக் கூறி, சுவற்றில் தலையை முட்டிக்கொண்டு தற்கொலை செய்துக் கொள்வதாக மிரட்டினர்.இதுகுறித்து சிறை அலுவலர் ரவி,58; அளித்த புகாரின் பேரில் கைதிகள் பாலாஜி, அழகுராஜா, விஷ்ணு ஆகியோர் மீது கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை