உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காதலி தற்கொலை: காதலனுக்கு சிறை

காதலி தற்கொலை: காதலனுக்கு சிறை

கடலூர் : காதலியின் தற்கொலைக்குக் காரணமான காதலனுக்கு கடலூர் கோர்ட்டில் ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பண்ருட்டி அடுத்த மாளிகம்பட்டைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி மகள் தமிழ்ச்செல்வி, 23. இவரும் சிறுவத்தூரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் அசோகனும் கல்லூரியில் படித்தபோது காதலித்து வந்தனர். கடந்த 2009ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி இரவு தமிழ்ச்செல்வி, அசோகனுக்கு போன் செய்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார். இதற்கு அசோகன் மறுத்ததால் மனமுடைந்த தமிழ்ச்செல்வி தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் கருகிய நிலையில் அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஏப்ரல் 2ம் தேதி இறந்தார். புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார், அசோகனை கைது செய்து கடலூர் செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி உத்திராபதி, தமிழ்ச்செல்வி தற்கொலைக்குக் காரணமான அசோகனுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை மற்றும் 1,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். அரசு தரப்பில் ஆறுமுகம் ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ