உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் ரயில் விபத்து அய்யப்பன் எம்.எல்.ஏ. ஆறுதல்

கடலுார் ரயில் விபத்து அய்யப்பன் எம்.எல்.ஏ. ஆறுதல்

கடலுார் : கடலுார் அருகே ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை அய்யப்பன் எம்.எல்.ஏ., சந்தித்து ஆறுதல் கூறினார்.கடலுார் அடுத்த செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் 3 பேர் இறந்தனர். ஒரு மாணவர் மற்றும் வேன் டிரைவர் காயமடைந்தனர். விபத்து நடந்த இடத்தை மீட்பு பணியில் ஈடுபடச் சென்றவர் மின்சாரம் தாக்கி காயமடைந்தார்.காயமடைந்த 3 பேரும் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை அய்யப்பன் எம்.எல்.ஏ. சந்தித்து ஆறுதல் கூறினார்.காயமடைந்தவர்களின் உறவினர்களிடம், உயர்தர சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.மேலும், விபத்து குறித்தும், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி