சி.முட்லுார் அரசு பள்ளியில் தினமலர் - பட்டம் இதழ் வழங்கல்
கடலுார் : சிதம்பரம் அடுத்த சி.முட்லுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கப்பட்டது.மாணவ, மாணவியரின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு செய்திகள், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி, தற்போதுள்ள தொழில்நுட்ப அபிவிருத்திகள் உள்ளிட்ட அறிவியல் தகவல்களைமாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் 'தினமலர் - பட்டம்' இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சி.முட்லுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு பட்டம் இதழ் வழங்கினார். தலைமை ஆசிரியர் தமிழரசி, ஆசிரியர்கள் அன்புராஜ், ராஜகோபால் மற்றும் மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.