உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பிரம்மராயர் கோவில் பகுதியில் பன்றிகளால் சுகாதார சீர்கேடு

பிரம்மராயர் கோவில் பகுதியில் பன்றிகளால் சுகாதார சீர்கேடு

சிதம்பரம் : சிதம்பரம் அருகே பிரம்மராயர் கோவில் பகுதியில் பன்றிகள் அதிகமாக உலவுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சிதம்பரம் புவனகிரி லிங்க் ரோட்டில் பிரம்மராயர் கோவில் உள்ளது. இப்பகுதியில் 5,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் பன்றிகள் அதிக அளவில் உலவி வருகிறது. இதனால் பிரம்மராயர்கோவில் பகுதியிலும், சுற்றுப்புற குடியிருப்பு பகுதியிலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அப்பகுதியில் பன்றிகள் உலவுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ