மேலும் செய்திகள்
விழிப்புணர்வு ஊர்வலம்
01-Aug-2025
கிள்ளை: சிதம்பரம் அரசு கலைக் கல்லுாரியில், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. முதல்வர் அர்ச்சுனன் தலைமையில் பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் போதைப் பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து, கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் மகேஷ் விழிப்புணர்வு ஊர் வலத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் மணிவர்மன், பிரபா, கோவிந்தன், பழனிவேல், புதுச்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் கனிமொழி, கணேஷ் உட்பட பலர் பங் கேற்றனர்.
01-Aug-2025