உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை வெளிவளாக பயிற்சி

மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை வெளிவளாக பயிற்சி

விருத்தாசலம்: நல்லுார் அடுத்த பூலாம் பாடி கிராமத்தில், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம், தனுக்கா நிறுவனம் ஆகியன சார்பில், மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை குறித்த வெளிவளாக பயிற்சி நடந்தது. இந்த பயிற்சிக்கு, திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தலைமை தாங்கி, வேளாண் அறிவியல் நிலையத்தின் முக்கிய குறிக்கோள் மற்றும் அதிக மகசூல் தரும் உயர்தர ரகங்கள், விதை உற்பத்தி செய்யும் முறை மற்றும் மக்காச்சோளத்தில் படைப்புழு அதன் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு தெளிவாக விளக்கினார். அதைத்தொடர்ந்து, ஒருங்கிணைந்த பயிர் பராமரிப்பு மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மை குறித்து, விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், கோடை உழவு விதைநேர்த்தி, மண் வள மேம்பாடு ஆகியவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இதில், கிராம விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !