மேலும் செய்திகள்
குருக்குப்பட்டி ஏரியில் ஆகாயத்தாமரை
30-Jun-2025
கடலுார்: கடலுார் மாவட்டத்திலுள்ள 37 ஏரிகளின் மீன்பிடி உரிமை 3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட வரும் ௨௮ம் தேதி முதல் மின்னணு ஒப்பந் தப்புள்ளிகள் மீன் வளம் மற்றும் பரங்கிப்பேட்டை மீனவர் நலத்துறை உதவி இயக்குனரால் வரவேற்கப் படுகின்றன. ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.tntenders.gov.inஇணையதள முகவரியினை காணலாம். 04144-243033 என்ற தொலைபேசி எண், gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம். ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தில் உள்ள கானுார் ஏரி, ஸ்ரீநெடுஞ்சேரி ஏரி, ஸ்ரீபுத்துார் ஏரி, குணமங்கலம் ஏரி, குன்னத்து ஏரி, புவனகிரி வட்டத்தில் உள்ள சொக்கன்கொல்லை ஏரி, சூடாமணி ஏரி, வாலாஜா ஏரி, மதுவானமேடு ஏரி, பண்ருட்டி வட்டத்தில் உள்ள சிறுகிராமம் ஏரி, கொளப்பாக்கம் ஏரி, சிறுவத்துார் ஏரி. வீரப்பெருமநல்லுார் ஏரி, மனம் தவிழ்ந்த புத்துார் ஏரி, எலந்தம்பட்டு ஏரி, திட்டக்குடி வட்டத்தில் உள்ள ஓ.கீரனுார் ஏரி, பூவனுார் ஏரி, தீவளூர் ஏரி, காரையூர் ஏரி, சிறுமுலை ஏரி, தாழநல்லுார் ஏரி, அரியராவி ஏரி, பெருமுலை ஏரி, குறிஞ்சிப்பாடி வட்டத்தில் உள்ள பெருமாள் ஏரி , மேலக்கொளக்குடி ஏரி. விருத்தாசலம் வட்டத்தில் உள்ள தர்மநல்லுார், கோபாலபுரம் (எ) வண்ணத்தி ஏரி, கம்மாபுரம், விருத்தாசலம் கஸ்பா ஏரி, முகாசப்பருர், எடச்சித்துார், சத்தியவாடி,அலிச்சக்குடி, கார்கூடல், சாத்துக்கூடல், மங்களம்பேட்டை மற்றும் இளமங்கலம் ஆகிய ஏரிகள் மீன்பாசி குத்தகைக்கு விடப்பட உள்ளது என சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
30-Jun-2025