உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் ஹைமாஸ் விழுந்தது பஸ் நிலையத்தில் பரபரப்பு

கடலுாரில் ஹைமாஸ் விழுந்தது பஸ் நிலையத்தில் பரபரப்பு

கடலுார்: கடலுார் பஸ் நிலையத்தில் ஹைமாஸ் விளக்கு திடீரென விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் பஸ் நிலையத்தில் மணிகூண்டு அருகே ஹைமாஸ் விளக்கு எரியாமல் இருந்தது. இதனை மாநகராட்சி ஊழியர்கள் நேற்று கீழே இறக்கி சரி செய்தனர். பணி முடிந்ததும் மீண்டும் கயிற்றால் கட்டி மேலே ஏற்றும்போது, திடீரென கயிறு அறுந்து மின்விளக்கு கீழே விழுந்ததது. இதனால், அங்கிருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மின்விளக்கு விழுந்தபோது, யாரும் அருகில் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ