| ADDED : டிச 12, 2025 06:35 AM
கடலுார்: பள்ளிப்பட்டு கிராமத்தில் நெல் விதைப் பண்ணை வயலை வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு செய்தார். கடலுார் அடுத்த பள்ளி்ப்பட்டு கிராமத்தில் நெல் விதைப் பண்ணை வயல், மின்னணு முறையில் பயிர் சாகுபடி பரப்பு கணக்கெடுப்பு, துாக்கணாம்பாக்கம் துணை வேளாண்மை விரிவாக்க மையம் உள்ளிட்ட இடங்களில் வேளாண்மை இணை இயக்குனர் லட்சுமிகாந்தன், வேளாண்மை துணை இயக்குனர் கதிரேசன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின், விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்களை வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ், உதவி விதை அலுவலர் பிரபாகரன், உதவி வேளாண்மை அலுவலர் ரஜினிகாந்த் உடனிருந்தனர்.