உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஜெயப்பிரியா பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி

ஜெயப்பிரியா பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி

மந்தாரக்குப்பம்: விருத்தாசலம் ஜெயப்பிரியா வித்யாலாயா சீனியர் செகண்டரி பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. ஜெயப்பிரியா வித்யாலாயா கல்வி குழும தலைவர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். பள்ளி இயக்குநர் தினேஷ் முன்னிலை வகித்தார். மழலையர்கள் கிருஷ்ணன் மற்றும் ராதை தோற்றத்தில் அணிவகுப்பு நடத்தி வெண்ணெய் உள்ள பானையை உடைத்து விழா கொண்டாடினர். அதை தொடரந்து மாணவர்கள் கிருஷ்ணருக்கு லட்டு, முறுக்கு, அதிரசம், அவல் போன்றவை வைத்து வழிப்பட்டனர். ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் நித்யா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். அதே போல் கோபாலபுரம் ஜெயப்பரியா வித்யாலாயா மெட்ரிக் பள்ளியிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை