உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சுந்தரேஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்

சுந்தரேஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்

விருத்தாசலம் : பரவளூர் சுந்தரேஸ்வரர் கோவிலில், நாளை கும்பாபிேஷகம் நடக்கிறது.விருத்தாசலம் அடுத்த பரவளூரில் மீனாட்சி அம்மன் உடனுறை சுந்தரேஸ்வரர் கோவில் புனரமைக்கப்பட்டு, நாளை 7ம் தேதி கும்பாபிேஷகம் நடக்கிறது. இதை முன்னிட்டு, இன்று (6ம் தேதி) காலை 7:30 மணிக்கு மேல், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நவக்கிரக பூஜைகள் நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு முதல் கால யாக பூஜை துவங்குகிறது.நாளை காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, வேத பாராயணம், நாடிசந்தானம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன், காலை 9:00 மணிக்கு மேல், 10:00 மணிக்குள், விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி