உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மதுபாட்டில்கள் விற்றவர் கைது

மதுபாட்டில்கள் விற்றவர் கைது

சேத்தியாத்தோப்பு : டாஸ்மாக் மதுபாட்டில் கள் விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.ஒரத்துார் சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் தலைமையில் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கிளியனுார் டாஸ்மாக் கடை அருகே காத்திருப்போர் கூடத்தில் மதுப்பாட்டில்கள் பதுக்கி விற்ற நபரை பிடித்து விசாரித்தனர்.இதில், கிளியனுார் புதுகுளத்தெருவைச் சேர்ந்த அறிவழகன் மகன் ஆகாஷ், 23; என்பதும், மதுபாட்டில்கள் விற்பனை செய்வதும் தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை