உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரேஷன் கடையில் தரமில்லாத அரிசி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

ரேஷன் கடையில் தரமில்லாத அரிசி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் மா. கம்யூ., கூட்டம் ரவி தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் மாதவன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். திருக்கண்டேஸ்வரம் ரேஷன் கடையில் கடந்த 6 மாதமாக தரமில்லாத அரிசியை வழங்குகிறார்கள்.மாதந்தோறும் கோதுமை, மண்ணெண்ணெய் முறையாக வழங்குவதில்லை. இதை கண்டித்து வரும் 6 ஆம் தேதி ரேஷன் கடை முன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மாவட்ட குழு ஜெயபாண்டியன், பகுதி செயலாளர் ஸ்டீபன்ராஜ், தர்மேந்திரன், தண்டபாணி,ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை