உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முன்விரோதத்தில் மிரட்டல் விடுத்தவர் கைது

முன்விரோதத்தில் மிரட்டல் விடுத்தவர் கைது

நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு அடுத்த சாத்தமாம்பட்டு கிழக்குதெருவை சேர்ந்தவர் மணிகண்டன்,46;அதே பகுதியை சேர்ந்தவர் பஞ்சன். கடந்த சில ஆண்டுகளாக மணிகண்டன் குடும்பத்தினருக்கும், பஞ்சன் குடும்பத்தினருக்குமிடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை மணிகண்டனை பஞ்சன் மகன்கள் சஞ்சை, விஜய், உறவினர் செல்வமணி ஆகிய 3 பேரும் சேர்ந்து தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர். நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து செல்வமணி, 37; கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ