உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சுய உதவிக் குழுவினருக்கு அமைச்சர் நலத்திட்ட உதவி

சுய உதவிக் குழுவினருக்கு அமைச்சர் நலத்திட்ட உதவி

கடலுார்: கடலுாரில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். அய்யப்பன் எம்.எல்.ஏ., மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தனர். வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு 993 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 81.46 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.தொடர்ந்து 3 பெண்களுக்கு சுய உதவிக்குழு பொருட்கள் விற்பனை செய்ய மூன்று சக்கர மின்சார வாகனம் வழங்கப்பட்டது. மேலும் 2022--23ம் ஆண்டில் மகளிர் குழுவிற்கு வங்கி கடன் வழங்கியதில் சிறப்பான வகையில் பங்குபுரிந்த வங்கிகள் மற்றும் இளைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மகளிர் திட்ட இயக்குநர் ஸ்ருதி, மாநகர தி.மு.க., செயலாளர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.உதவி திட்ட அலுவலர் ராஜேஷ்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ