மகளிடம் அத்துமீறிய தந்தைக்கு போக்சோ
பண்ருட்டி : பண்ருட்டி அருகே 16 வயது மகளிடம் அத்துமீறிய தந்தையை, போக்சோ வழக்கில் மகளிர் போலீசார் கைது செய்தனர்.பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 42 வயது விவசாய தொழிலாளி. இவரது 16 வயது மகள், பிளஸ் 1 படித்து வருகிறார். இந்நிலையில், மகளிடம் தந்தை கடந்த 17ம் தேதி பாலியல் நோக்குடன அத்துமீறியுள்ளார்.இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரில், பண்ருட்டி மகளிர் போலீசார், சிறுமியின் தந்தை மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர்.