| ADDED : நவ 17, 2025 01:50 AM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21ம் தேதி நடக்கிறது. கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட் டு வருகிறது. வரும், 21ம் தேதி வெள்ளிக்கிழமையன்று எண்.8, ஆற்றங்கரைத் தெரு, புதுப்பாளையம், நியூசினிமா தியேட்டர் எதிரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இம்முகாமில் 15க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட உள் ளது. இதில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இம்முகாமில் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுதாரர்களின் பதிவு எண் வேலைவாய்ப்பு அலுவலக பதிவிலிருந்து நீக்கம் செய்யப்படமாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.