உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்து : இருவர் பலி

இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்து : இருவர் பலி

பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் இரண்டு பேர் இறந்தனர். பெண்ணாடம் அடுத்த வெண்கரும்பூர் பழைய காலனியைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 68. இவர் நேற்று காலை 6:30 மணி யளவில் விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் வெண்கரும்பூர் பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே வந்த லாரி மோதி யதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். மற்றொரு விபத்து திட்டக்குடி அடுத்த தொளாரைச் சேர்ந்தவர் ஆனந்தசெல்வன், 40. இவர் தனது பைக்கில் திட்டக்குடி - விருத்தாசலம் சாலையில் விருத்தாசலம் சென்றார். அப்போது, முருகன்குடி அருகே சென்றபோது, அவ்வழியே வந்த மற்றொரு பைக் ஆனந்தசெல்வன் பைக் மீது மோதியது. இதில் படுகாய மடைந்த அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை