உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மணல் கடத்தல் வேன் பறிமுதல்

மணல் கடத்தல் வேன் பறிமுதல்

விருத்தாசலம்: மணிமுக்தாற்றில் மணல் கடத்திய இருவரை கைது செய்த போலீசார், வேனை பறிமுதல் செய்தனர்.விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் நேற்று மாலை ரோந்து சென்றபோது, சாவடிகுப்பம் மணிமுக்தாற்றில் டாடா ஏஸ் வேனில் மணல் கடத்திய இருவரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள், அதே பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மகன் ராஜதுரை, 33, வேல்முருகன் மகன் அன்புமணி, 19, என்பது தெரிந்தது. இது தொடர்பாக விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து, வேனை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ