உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தமிழ் ஆட்சிமொழிச்சட்ட விழிப்புணர்வு ஊர்வலம்

தமிழ் ஆட்சிமொழிச்சட்ட விழிப்புணர்வு ஊர்வலம்

கடலுார்; கடலுார் டவுன்ஹால் அருகே தமிழ் ஆட்சிமொழி சட்டவார விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, ஊர்வலத்தை துவக்கி வைத்தார். பின், அவர் பேசுகையில், கடலுார் மாவட்டத்தில் 18 முதல் 27ம் தேதி வரை ஆட்சிமொழி சட்டவாரம் கொண்டாடப்படுகிறது. கணினித் தமிழ் விழிப்புணர்வுக் கருத்தரங்கம், ஆட்சிமொழி மின்காட்சியுரை, தமிழில் குறிப்புகள், வரைவுகள் எழுதுவதற்கான பயிற்சி, விழிப்புணர்வு ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது என்றார்.இதில், கல்லுாரி மாணவர்கள் கலந்து விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி, நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். அப்போது, டி.ஆர்.ஓ., ராஜசேகரன், தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் (பொறுப்பு) சுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை