தி மிராக்கல் மைண்ட்ஸ் பள்ளி திறப்பு விழா
கடலுார்: கடலுார் புதுப்பாளையத்தில் நடந்த தி மிராக்கல் மைண்ட்ஸ் பள்ளி திறப்பு விழா கோலாகலமாக நடந்தது. விழாவில் ஜி.ஆர்.கே.,குழும தலைவரும், கடலுார் வரத்தக சபையின் தலைவருமான துரைராஜ், பங்கேற்று குத்துவிளக்கற்றி பள்ளியை திறந்து வைத்தார். பள்ளி தாளாளர் புவனேஸ்வரி செந்தில்ராஜ் வரவேற்றார். விழாவில் மாநகராட்சி கவுன்சிலர் சுதா ரங்கநாதன், மணிமாறன், தீயணைப்புத்துறை மாவட்ட உதவி அலுவலர் விஜயகுமார், குற்றப்புலனாய்வுத்துறை தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுதாகர், ஆர்.பி.ஜி.,கேட்டரிங் உரிமையாளர் கிரிதரன், ஜி.ஆர்.கே., குழும செய்தி தொடர்பாளர் ஆனந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.