உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திருக்கல்யாண உற்சவம்

திருக்கல்யாண உற்சவம்

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் ரதசப்தமி விழா மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் ரதசப்தமி விழா நடந்தது. அதையொட்டி நேற்று முன்தினம் காலை கெடிலம் ஆற்றில் கைலாசநாதர் சாமிக்கு தீர்த்தவாரி நடந்தது. மதியம் விநாயகர், காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர், சண்டிகேஸ்வரர்,தனி அம்மன், வள்ளி தேவசேனா சதேம சிவசுப்ரமணியர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடந்தது.மாலை 6:30 மணிக்கு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதருக்கு திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை