மணவாள மாமுனிகள் கோவிலில் திருமஞ்சனம்
கடலுார் : திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் கோவிலில் 22ம் தேதி திருமஞ்சனம் நடக்கிறது.கடலுார், திருவந்திபுரத்தில் மணவாள மாமுனிகள் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் திருமூலம் நட்சத்திரத்தை முன்னிட்டு வரும் 22ம் தேதி காலை 10:30 மணிக்கு மணவாள மாமுனிகள் சுவாமிக்கு திருமஞ்சனம், 12:30 மணிக்கு திருப்பாவை சாற்றுமறை, மாலை 4:30 மணிக்கு ஊஞ்சல் சேவை, 5:00 மணிக்கு வீதியுலா, இரவு 7.00 மணிக்கு சேவை சாற்றுமறை நடக்கிறது.