மேலும் செய்திகள்
மயங்கி விழுந்து முதியவர் சாவு
07-May-2025
கடலுார்: ரெட்டிச்சாவடி அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீசார் மீட்டு விசாரித்து வருகின்றனர். கடலுார் அடுத்த சின்னகங்கணாங்குப்பத்தில் 35 வயது மதிக்கதக்க ஆண் சடலம் நேற்று முன்தினம் கிடந்தது. இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
07-May-2025