உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம்; சாத்தியம் கிராம மக்கள் மறியல்

கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம்; சாத்தியம் கிராம மக்கள் மறியல்

விருத்தாசலம்; விருத்தாசலம் அருகே, குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக கூறி, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. விருத்தாசலம் அடுத்த சாத்தியம் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த ஒருவாரமாக கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எவ்வித பயனும் இல்லை.இதில், ஆத்திரமடைந்த கிராம மக்கள், நேற்று காலை 9:30 மணியளவில் விருத்தாசலம் - வேப்பூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.தகலறிந்து சென்ற விருத்தாசலம் போலீசார் மற்றும் வேப்பூர் தாசில்தார் மணிகண்டன் தலைமையிலான வருவாய்துறை அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதில், உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பேரில், காலை 10:00 மணியளவில் கிராம மக்கள் அனைவரும் மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர்.இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை